Thursday 26 July 2012

கீதங்கள்

அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...


 அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
 வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 அல்லாஹ்வை நாம் தொழுதால்... 


 பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
 பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
 பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
 பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ


 அல்லாஹ்வை நாம் தொழுவோம்... 


 வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
 வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
 விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
 விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ


 அல்லாஹ்வை நாம் தொழுவோம்... 


 இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
 இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
 இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
 இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்


 அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
 வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்



                                            இந்த மாதம் ஒரு புனிதமான மாதம் ஏனென்றால் இந்த மாதத்தில்தான் நீங்கள் கேட்கும் துஆ அனைத்தும் உடனே கபுல் ஆகிவிடுகின்றன ஆகையால் உங்க்களால் எவ்வளவு தொழ முடியிமோ அவ்வளவு அளவு தொழுங்கள் தொழுவிட்டு அல்லாஹ் விடம் கேளுங்கள் அல்லாஹ் நம் அனைவறுக்கும் நற்கூலியை வழங்குவானாக..!ஆமீன்,ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

No comments:

Post a Comment

கருத்துரைக்காக காத்திருக்கிறோம்....!