Saturday 30 June 2012

பாபரி மஸ்ஜித் ராமஜென்ம பூமி அல்ல


           பாபரி மஸ்ஜித் ராமஜென்ம பூமி அல்ல
                                          
                   ராஜபுத்திர மன்னன் ரான ராஜா சிங்கின் அழைப்பை ஏற்று ஜஹீருத்தின் முஹம்மது பாபர் 1526 இல் பானிபட் எனும் இடத்தை நோக்கி படையெடுத்தார்.அவர் இப்றஹிம் லோடி என்ற முஸ்லிம் மன்னரை தோற்கடித்து மொகலாய ஆட்சிக்கு வித்திட்டார். இவருடைய உத்தரவுப்படி 'அவது' (அயோத்தியா) வை நிர்வகித்த ஆளுரான மீர்பக்கி ஒரு பள்ளிவாசலை கட்டினார்.இப்பள்ளிவாசல் பின்னர் பாபரிமஸ்ஜித் என்று அழைக்கப்ட்டது.இதுவே பாபரிமஸ்ஜிதின் வரலாறு. 
                   
                 முஸ்லிம்களும்,ஹிந்துக்களும் பல நூற்றண்டுகாலம் நல்லிணக்கத்துடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.அவகள் முஸ்லிம் மற்றும் ஹிந்து தலைவர்களின் தலைமையில் அணிவகுத்து நின்று வெள்ளையர்களுக்கு எதிராக 1857 இல் போராடியுள்ளனர்.  
                 
                 முஸ்லிம்-ஹிந்த் ஒற்றுமைதான் வெள்ளையர்கள் அவதில் ஆட்சி செய்ய மிகப்பெறிய தடையாக அமைந்தது.பிரிட்டிஷ் ஏஜெண்டான லார்ட் டஃப்ரின்(1884-1888) முஸ்லிம்களுக்கெதிராக ஹிந்துக்களை திசைதிருப்ப சதித்திட்டம் ஒன்றை தீட்டினர்.
                 
                 அவர் புத்த ஜோதிடர் ஒருவரின் உதவியுடன் பாபரிமஸ்ஜித் அமைந்த இடத்தில் தான் இராமர் பிரந்தார் சீதையின் சமயலறை அங்கு தான் இருந்தது என்றும் கதைகட்டி விட்டார்.
                                               
                 இப்பொய் பிரச்சாரத்தை ஹிந்துக்களில் ஒரு குற்றிப்பிட்ட பிரிவினரை சாதூர்யமாக நம்பவைத்து வழிகெடுத்ததில் வெள்ளைய நிர்வாகத்தினர் வெற்றி பெற்றுவிட்டனர்.அதனடிப்படையில்தான் மஹந்த் ரகுபிர் தாஸ் என்பவர் பைஸாபாத் துனை நீதிபதி பண்டிட் ஹரி கிஷன் முன்பு டிசம்பர் 12, 1885 அன்று ஒரு மனுதாக்கல் செய்கிறார்.

அதில் அவர்;
                                            "நான் ராமஜென்ம பூமியின் மஹந்த் (சாமியார்) பாபரிமஸ்ஜிதின் முன்பகுதியிலுள்ள நடைமேடைதான் ராமர் பிறந்த இடம்.இது திறந்த வெளி நடைமேடையாக இருப்பதால் பூஜை செய்ய அங்கு சில சங்கடங்கள் எங்களுக்கு இருக்கிறது.எனவே அங்கு அதன்மீது ஒரு கோவிலை கட்ட வேண்டும்.ஆனால் அரசாங்கம் எனக்கு அனுமதியளிக்காமல் தடுக்க வருகிறது"என்று கூறினார்.                                         
                     
                பள்ளிவாசல் அருகே கோவில் கட்டப்படுவதால் பிரச்சனைகள் வரலாம் என்று இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
                     
                இந்த தருணத்தில் கோவில் கட்ட அனுமதி கொடுப்பது என்பது கலவரங்களுக்கும்,படுகொலைகளுக்கும்,அடித்தளம் அமைப்பது போன்றாகிவிடும் என்று நீதிமன்றம் கருதுகிறது.நீதியின் பார்வையில் ஹிந்துக்களும்-முஸ்லிம்களும் அவை இரண்டு வெவ்வேறு மதமாக இருப்பதால் அவர் கேட்பதை ஏற்றுகொள்ள முடியாது என்று கூறி மனு நிராகரிக்கப்பட்டது.
                                                                                     
               இந்த நீதிமன்ற தீர்ப்பு மூலம் நமக்கு விளங்குவது என்னவெனில் பாபரிமஸ்ஜித் அந்த இடத்தில் அமைந்திருப்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.அந்தனிலம் தொடர்பாக ஹிந்துக்களுக்கும் ஆட்சேபணை ஒன்றும் இல்லை என்பதுதான்.மஸ்ஜிதும் நடைமேடையும் ஒரு சுவரின் மூலம் பிரிக்கப்பட்டிருந்தது.இது பண்டிட் ஹரிகிஷன் அவர்களின் தீர்பிலேயே உள்ளது.
                                        
                                      1885 ம் ஆண்டு துனை நீதிபதி பண்டிட் ஹரிகிஷன் தந்த தீர்ப்பில்;
                   
                                    "பள்ளிவாசலுக்கும் சபுத்திராவிற்கும் (நடைமேடை) இடையே ஒரு சுவர் இருக்கின்றது என்பது பார்வைக்கு வைக்கப்பட்ட சரியான வரைபடத்தின் மூலம் தெளிவாகிறது.அங்கு பள்ளிவாசலுக்கும் சபுத்திராவிற்கும் இடையில் தெளிவாக பிர்க்கப்பட்ட வரயறுக்கப்பட்ட எல்லை உள்ள்து" என்றார்.
                  
                                    'அவது'டைய (அயோத்தியின்) நீதிமன்ற ஆணையாளர் அல்லது ஜூடிசியல் கமிக்ஷனர் மற்றும் மாவட்ட நீதிபதிகள் முன்பு அடுத்தடுத்து தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.ஃபைஸாபாத் மாவட்ட நீதிபதி கலோனல் ஜே.ஈ.ஏ.சேம்பர் அவர்கள் மார்ச், 26, 1886ல் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மஹந்த் ரகுபிர் தாஸின் கோரிக்கையை நிராகரித்தார்.
             
            பின்னர் இதே கோரிக்கை ஜுடிசியல் கமிக்ஷனர் ஏ.டபிள்யு யங்க் ஆல் நவம்பர் 1,1886 அன்று நிராகரிக்கப்பட்டது. இதுதான் சபுத்திரா அல்லது நடைமேடையின்மீது கோவில் கட்ட வேண்டிய பிரச்சனையில் நீதிமன்ற விசாரணையின் இறுதி முடிவாகும். அதன் மூலம் அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.
            
           அந்த நேரத்தில் ஹிந்துக்களின் கோரிக்கை பாபரி மஸ்ஜித் அல்ல.மாறாக மஸ்ஜிதுடையே முன்பகுதியில் அமைந்திருக்கும் சபுத்திரா என்ற நடல்மேடைதான் என்பதை கவனத்தில் கொல்ல வேண்டும்.
           
         அதுவும் பள்ளிவாசலுக்கு அருகில் நடைமேடையில் கொவில் கட்டப்படும் கோரிக்கை தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள்து.இவ்வாறாக முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்தவும் சபுத்திராவில் ஹிந்துக்கள் பூஜை செய்வதும் 1949 வரை தொடர்ந்தது.
    
        அயூத்தியா வாழ் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நில விவந்த ஒற்றுமை உணர்வை குலைக்க வெள்ளை ஏகாபத்தியம் தொடர்ந்து தந்திரம் செய்தது.
                       
        அதாவது ராமர் பிறந்த இடத்தின் மீது அமைந்திருந்த கோவிலை இடித்துவிட்டுத் தான் பாபர் பள்ளிவாசல் கட்டினார் என்பதாக பொய்யான செய்திகளை பரப்ப ஆரம்பித்தனர்.
       
        பிரிட்டிஷ் அதிகாரி ஹெச்.ஆர்.நெவில் என்பவர் 1905ல் இந்த பொய் பிரசாரத்தையே விரிவாக இப்படி கூறினார்;1528ல் பாபர் அயோத்தியா வந்து ஒரு வாரம் தங்கியிருந்தார்.பழங்கால கோவிலை இடித்தார்,அதன் மீது பாபர்மஸ்ஜித் என்று அழைக்கப்படும் பள்ளிவாசலை கட்டினார்''(ஃபைஸாபாத் கெசட்;பக்கம் 173)இது வேண்டுமென்றே திட்டமிட்டு புனையப்பட்ட கதையாகும்;பள்ளிவாசலின் மீது எழுப்பப்பட்ட சர்ச்சை இதன் மூலம் வலுவடைந்தது.
                      
       ஆனால் பாபரி மஸ்ஜித் நிலத்தின் மீது கோவில் இருந்ததுக்கான எழுத்துப்பூர்வமான மற்றும் தொல்லியல் பழங்கால பொருள் போன்ற எந்த வித மூல ஆதாரம் எதுவுமே இன்றுவரை இல்லை.பின்பு 1934ல் சுதந்திரத்திற்கு முன்பு அயோத்தியாவில்  வகுப்பு கலவரம் ஒன்று நிகழ்ந்தது.அந்த கலவரம் பாபரி மஸ்ஜித் தொடர்பாக நடந்தது அல்ல.மாறாக ஒரு மாடறுப்பு சம்பவம் தொடர்பாகத்தான் நடைபெற்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும் தகவல் பெற (click this)

4 comments:

  1. nalla thakaval !

    thodarungal!

    ReplyDelete
  2. இன்னும் தொடருவேன்

    ReplyDelete
  3. சின்ன வயதில்
    பெரிய தகவல்
    அருமையா இருக்கு

    ReplyDelete

கருத்துரைக்காக காத்திருக்கிறோம்....!